தடுப்பூசி செலுத்தல் செயற்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு – ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக பிராணவாயுவை வழங்குவது குறித்தும் கவனம்!
Saturday, August 21st, 2021
இலங்கையின் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் பாராட்டத்தக்கதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அலகா சிங் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல பதவியேற்றதன் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி ஒருவரை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.
அவசர வைத்திய வசதிகளை நாட்டுக்கு வழங்குவது குறித்தும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி இதன்போது கருத்துரைத்துள்ளார்.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி பிராணவாயு விநியோகித்தல் குறித்து கவனம் செலுத்துவதாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முல்லைத்தீவுமாவட்டத்தில் வரட்சியால் நன்னீர் மீன்பிடிபாதிப்பு!
தொடரும் கனமழை - யாழ்மாவட்டத்தில் 1047 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பண...
இந்தியாவின் ஆதரவே இலங்கையின் பொருளாதாரம் நிலைத்திருப்பதற்கு காரணம் - இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தா...
|
|
|
விஷேட கூட்டத்தில் நிதிக்குழு அறிக்கை விவாதிப்பு முரணானது: மாநகரின் தவறை சுட்டிக்காட்டியது ஈ.பி.டி.பி...
மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயண அனுமதி – இறுக்கமான நடைமுறை தொடரும் என யாழ் மாவட்ட கொரோனா ...
மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளது - தகவல் அறியும் சட்டத்தின் ...


