தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர், ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி சித்திரவதை காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், யாழ்ப்பாண மாவட்ட உதவி நிவாகச் செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிததுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்ட ஶ்ரீரங்கேஸ்வரன் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

எமது கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூத்த அமைச்சர் என்ற வகையிலும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரர் என்ற வகையிலும் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.

இதேவேளை அண்மையில் பருத்தித்துறையில் இந்திய மீனவர்கள் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெப்பிய போது,

இலங்கை நாட்டு எல்லைக்குள் படகுகள் வருவதை கடத்தல் அல்லது சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் உள்ளிட்ட நோக்கம் மற்றும் இயந்திர கோளாறு என இரு வகையாக பார்க்க வேண்டும்.

ஆனால் குறித்த இந்திய மீனவர்களுடைய படகுகளின் இயந்திரமும் செயலிழந்தே இலங்கை கரையில் ஒதுங்கியது. இதனால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அந்த வகையில் கடற்படையினரால் படகு செயழிலந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயம் இந்திய மீனவர்களால் இந்திய அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டு தூதரகம் ஊடாக மனிதாபிமான அடிப்படையில் இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் அவர் தெரிவிதர்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது பொதுச்சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் - வர்த்தகர்க...
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவி...
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான 8 வாகனங்கள் பறிமுதல் - பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோ...