தகவல்களை வழங்க மறுக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கிலுள்ள அரச ஊழியர்களுக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் எச்சரிக்கை!
Wednesday, December 9th, 2020ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்களின் தகவல்களை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதனால் வட மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், வடக்கு மாகாண சபைக்குட்பட்ட அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தமது பணிக்கு புறம்பாக பகுதிநேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ ஊடக நிறுவனம் ஒன்றில் செய்தியாளராகவோ, அறிவிப்பாளராகவோ, ஆசிரியராகவோ பணிபுரியும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறும்,
தகவல்களை வழங்க மறுப்பவர்களிற்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நயினைக் கடலில் மூழ்கி பலியானவர்களுக்கு இறுதி அஞ்சலி!
பாவனையாளர்களை ஏமாற்றிய 95 வர்த்தகர்களுக்கு அபராதம்!
915 பேருக்கு இரட்டை பிராஜாவுரிமை!
|
|