டெங்கு’ நோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் – தடுப்பதற்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு வலியுறுத்து!
Sunday, January 16th, 2022
நாட்டில் ‘டெங்கு’ நோய் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொற்றுநோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த வருடத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தொற்றைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கடந்த 20ஆம் 21ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
சுத்தமான ‘சூழல் ஆரோக்கியமான சமூகம்’ என்ற தொனிப்பொருளில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மாகாண மற்றும் உள்ளராட்சி மன்ற அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு!
பெனிஸ்டரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு!
போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமுகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் ...
|
|
|


