வாழைப்பழ விலை திடீர் உயர்வு!

Thursday, July 19th, 2018

யாழ் குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச்சந்தையில் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 50 ரூபா முதல் 60 ரூபா வரையும் ஒரு கிலோ இதரை வாழைப்பழம் 50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

தற்போது மாம்பழம், வாழைப்பழம் ஆகிய பழ வகைகளின் சீசன் யாழ் குடாநாட்டில் நிறைவுபெற்றுள்ளமை மற்றும் தற்போதைய காலநிலை என்பனவே வாழைப்பழ விலை உயர்வுக்குக் காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தரமான வாழைக்குலைகள் சந்தைக்கு எடுத்து வரப்படுவதில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை எதிர்வரும் ஆவணி மாதம் யாழ் குடாநாட்டின் பிரசித்தி பெற்ற ஆலயங்களான நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம், வடமராட்சி செல்வச்சந்நிதி ஆலயம், தெல்லிப்பழை துரக்கா தேவி ஆலயம் உட்படப் பல ஆலயங்களின் வருடாந்த மஹோற்சவங்கள் ஆரம்பமாகவுள்ளமையால் கதலி வாழைப்பழத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts: