டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் எச்சரிக்கை!

Friday, February 18th, 2022

நாட்டில் தற்போது டெங்கு பரவும் அபாயம் இல்லாத போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அனைத்து வகையான நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்தும் அவதானமாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், டெங்கு நோயை தடுக்கும் வகையில் அவற்றை அழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 801 டெங்கு நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் 7 ஆயிரத்து 702 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
அரசியல் காரணிகளுக்காக நாம் ஒருபோதும் தேர்தல்களை ஒத்தி வைக்கப் போவதில்லை - அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக...