டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தகவல்!

Tuesday, May 21st, 2024

டெங்கு தீவிரமடைந்துள்ளதால் இவ்வருடம் இதுவரை 23,731 டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டதாகத் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் தொடர் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கொழும்பு மாவட்டத்தில் 5057 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2214 பேரும், களுத்துறையில் 1244 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3879 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த மாதத்தில் இதுவரை 1458 டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

புங்குடுதீவு  இறுப்பிட்டி கிராமத்தின் அபிவிருத்திக்காக முழுமையாகப் பாடுபடுவோம் - வேலணை பிரதேச தவிசாள...
வரையறையில்லாத அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்லுவதே இலக்கு - ஜனாதிபதி செயலக தொழில் விவகாரங்களின் ...
மக்களின் அபிவிருத்திகளை முடக்கும் நோக்குடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்கின்றனர் – ஈ.பி...