டெங்கு தொற்றின் ஆபத்த அதிகரிப்பு – நாடுமுழுவதும் இன்றுமுதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
Monday, November 8th, 2021
நாடு முழுவதும் இன்று 89 ஆம் திகதிமுதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தீர்மானித்துள்ளது.
டெங்கு அபாய வலயமாக அடையாளங்காணப்பட்டுள்ள 59 சுகாதார வைத்திய பிரிவுகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியே இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முப்படையினர், மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பொதுசுகாதார வைத்தியர் நிபுணர் தெரிவித்துள்ளார்.
இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் நேற்று (07) வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 22 ஆயிரத்து 902 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இறக்குமதி செய்யப்பட்டேனும் மானிய விலையில் அரிசி வழங்கப்படும்!
டிசெ. 31 ஆம் திகதி காணி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா - காணிப்பதிவாளர் ச.குணாஜினி!
பல அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள், பொறுப்புக்களை திருத்தி அதிவிசேட வர்த்தமானி வௌனியீடு - ஜனா...
|
|
|


