டெங்கு ஒழிப்பு தொடர்பான  2ஆம் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பம்!

Friday, July 21st, 2017

நாம் தொடங்குவோம், டெங்குவை ஒழிப்போம், தேசிய முன்முயற்சியில் இணைவோம் என்ற கூட்டு ஊடகத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் சகல அரச நிறுவன வளாகங்களிலும் சுத்தப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறும். முற்பகல் பத்து மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையிலும் சகல வானொலி, தொலைக்காட்சி சேவைகள் ஊடாக இந்த நடவடிக்கை நேரடியாக ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

டெங்கு ஆட்கொல்லியை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் வழிகாட்டலுடன் நிதி மற்றும் ஊடக அமைச்சும், அரசாங்க தகவல் திணைக்களமும் கூட்டு ஊடகத் திட்டத்தை அமுலாக்குகின்றது

இதனூடாக ஊடக நிறுவனங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபடும். இந்தத் திட்டத்தின் முதற்கட்டம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்மூலம் சாதகமான மாற்றம் ஏற்பட்டதாக ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: