டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே நாட்டின் எதிர்கால இலக்கு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Sunday, August 13th, 2023
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே இலங்கையின் எதிர்கால இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், மும்பையில் நடைபெற்ற “இலங்கையில் முதலீடு” என்ற மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வலுவான நிலையான பேரின பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், அதிக போட்டி நிறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்தல், விரைவான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி செல்ல தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுதல் என்பன இலங்கையின் எதிர்காலத்துக்கான பிரதான உத்திகளாகுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
படைப்புழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளது சோள உற்பத்தியை விவசாயிகள் மீண்டும் ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்கள...
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு 40 இலட்சம் தடுப்பூசிகள் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கா...
மது வரி அதிகரிப்பு - சட்டவிரோத மது உற்பத்தியை நாடும் மக்கள்!
|
|
|


