டங்கன் வைட்டின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட தபாலுறை!

Thursday, March 1st, 2018

மார்ச் முதலாம் திகதியாகிய இன்று ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இலங்கையின் முதலாவது விளையாட்டு வீரரான டங்கன் வைட்டின் நூறாவது பிறந்த தினம் இடம்பெறுவதை முன்னிட்டு விசேட தபாலுறை வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதனை பிரதி தபால் அதிபர் (நிர்வாகம்) வி.விவேகானந்தலிங்கம் ஜனாதிபதியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜயந்த விஜேரத்ன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினதும் தபால்திணைக்களத்தினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related posts: