ஜ.நா அதிகாரி இலங்கை வருகை!
Friday, July 7th, 2017
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையிடலாளர், பென் எமர்சன் எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
மனித உரிமை பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி நேரில் கண்டறிந்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 14ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் இவர் இக் காலப் பகுதியில் எமர்சன், வெளிவிவகார, சட்டம் ஒழுங்கு, தெற்கு அபிவிருத்தி, நீதி, பாதுகாப்பு, நிதி, ஊடகத்துறை, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Related posts:
பிரதமர் ரணில் சீனாவுக்கு பயணமானார்!
அறுவடைகளை 18தொடக்கம் 24 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளுங்கள் - வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணை...
கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங...
|
|
நாவற்குழியில் எவ்வித குடியேற்றங்களும் இனி வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது - யாழ். அரச அதிபர் அறிவிப...
நெருக்கடிகளால் நாடு நிறைந்திருப்பது தெரிந்தே நாட்டை பொறுப்பேற்றேன் - நாட்டை நிச்சயம் மீட்டெடுத்தே தீ...
மக்கள் அச்சமடையத் தேவையில்லை - நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் ஷெஹான் சேமசிங்கஅறிவி...