ஜூலை மாதம் 13, திகதிமுதல் 16 ஆம் திகதி வரை தபால் மூல வாக்கு பதிவு நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, June 11th, 2020

2020 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவுகள்  ஜூலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தினங்கள் தவிர்ந்த மேலதிக தினங்களாக ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

முன்பதாக கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டதை தொடர்ந்து ஜுன் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் எதிர்வரும் ஓகஸ் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: