ஜீ –7  மாநாட்டில் பங்கெடுக்க ஜனாதிபதி ஜப்பான் பயணம்!

Monday, May 23rd, 2016

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 25 ஆம் திகதி  ஜப்­பா­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.

ஜப்­பானில் இடம்­பெறும் ஜீ –7 நாடு­களின் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி ஜப்பான் செல்­கிறார். இதன்­போது அம்­மா­நாட்டில் ஜீ–7 அங்­கத்­துவ நாடு­களின் தலைவர்களைச் சந்­தித்து ஜனா­திபதி பேச்சுவார்த்­தை­களை நடத்­த­வுள்ளார். இம்­மா­நாடு 26 மற்றும் 27 இரண்டு தினங்கள் ஜப்­பானில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதே­வேளை, ஜப்­பா­னியப் பிர­தமர் ஷின்சோ அபேயின் விசேட பிர­தி­நிதி இலங்கை வந்­த­தோடு ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சே­னவை சந்­தித்துப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­ய­தோடு ஜப்­பா­னிய பிர­த­மரின் விசேட செய்தியையும் கைய­ளித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் ஜப்பான் விஜ­யத்தால் இலங்­கையில் வெளி­நா­டு­களின் முத­லீ­டுகள் அதி­க­ரிப்­ப­தோடு அபிவிருத்திகளுக்கு பெரு­ம­ளவு நிதி கிடைப்­பது மட்­டு­மின்றி எமது நாட்­ட­வர்­க­ளுக்கு ஐரோப்­பிய நாடு­களில் தொழில் வாய்ப்­புக்கள் கிடைக்கும் என்றும் அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

ஜீ – 7 பொரு­ளா­தார மாநாட்டில் அமெ­ரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்­மனி, இத்­தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்­கத்­துவம் வகிக்­கின்­றன. உலகில் பலம்­பொ­ருந்­திய பொரு­ளா­தார அபிவி­ருத்­தி­கண்ட நாடு­களின் மாநாட்டில் ஜனாதி­பதி கலந்து கொள்­வது விசே­டத்­து­வ­மாகும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வர­லாற்றில் முதன் முறை­யாக ஜீ – 7 நாடு­களின் பொரு­ளா­தார மாநாட்­டிற்கு இலங்கைத் தலை­வ­ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை இங்கு குறிப்­பி­டத்­தக்­க­து.

Related posts: