ஜவுளி துணி இறக்குமதிக்கும் வருகின்றது இறக்குமதி தடை – அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவிப்பு!
Friday, April 9th, 2021
இலங்கைக்கு ஜவுளி துணி இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளதாக பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தத் தடை வர்த்தமானியில் இருந்து நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அனைத்து ஜவுளி துணிகள் மற்றும் அச்சிடப்பட்ட பற்றிக் இறக்குமதிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தடை மூலம் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று அமைச்சர் ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
முன்பதாக மஞ்சள், வாசனைத்திரவியங்கள் மற்றும் பாம் ஓயில் என்பவற்றுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: ஏழு பேர் பலி : ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றம்!
மக்களை பாதுகாப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்குகிறது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!
அமரர் குணரட்ணம் கார்த்திகனின் 31 ஆவது நாள் நினைவு கூரலில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம்!
|
|
|


