ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவுவது அவசியம் – ஆசிய மன்றம் வலியுறுத்து!

Friday, August 5th, 2022

ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், இலங்கைக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவ வேண்டும் என பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைத்தீவு, முன்னொருபோதும் இல்லாத வகையில் பொருளாதார சரிவை எதிர்கொள்கிறது.

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60.8% ஆக உயர்ந்துள்ளது, மேலும் அந்நிய செலாவணி கையிருப்புக்கு மத்தியில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை நாடு இன்னும் எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, மிக அத்தியாவசியமான இறக்குமதிகளுக்கு கூட நிதியளிக்க முடியாத அளவு அந்நியச் செலாவணியில் பற்றாக்குறை நாட்டில் உள்ளது.

ஏறக்குறைய ஒரு வருடமாக இலங்கை மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர இதுவரை கிடைத்த இறையாண்மை கொண்ட நாடுகளின் உதவி போதுமானதாக இல்லை.

அவசர தேவை இருந்த போதிலும் சர்வதேச நாணய நிதியத்துடனான் பிணை எடுப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள பல மாதங்கள் ஆகும் என ஆசிய மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள், ஆசியாவின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளாகும்.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அதன் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும் ஜப்பான் மற்றும் தென் கொரியா உதவுவது கட்டாயம் என்று ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்கள் நிச்சயமாக சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு தகுதியானவர்கள் என்று ஆசிய மன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: