ஜப்பானுடன் இணைந்து இலங்கையில் உயிர்வாயு மின்னுற்பத்தி!

Friday, September 8th, 2017

ஜப்பானுடன் இணைந்து இலங்கையில் உயிர்வாயு மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இந்தியாவின் பெற்றோநெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் உயிர்வாயு மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்குவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இணங்கியுள்ள போதும், இந்தியா அதற்கான நிறுவனத்தை தெரிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது இந்தநிலையில் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இது குறித்த தீர்மானம் குறித்து இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்அடிப்படையில் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பெற்றோ நெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: