மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து – போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர்!
Wednesday, May 27th, 2020இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ. எச்.பண்டுக்க தெரிவித்துள்ளார்
போக்குவரத்து சபையிலுள்ள 4000 மேற்பட்ட பஸ்களை சேவையில் ஈடுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட பொது முகாமையாளர் , அனைத்து ஊழியர்களையும் கடமைக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்ளும் வகையில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து செவ்வாய்கிழமை அதிகாலைமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்’ளது.
இந்நிலையில் ஊழியர்களின் வரவு சற்று குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகவே அனைத்து ஊழியர்களையும் கடமைக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளதுடன் , அவர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை 27 ரயில்களை சேவையில் ஈடுப்படுத்தியிருப்பதாக ரயில்வே திணைக்கள முகாமையாளர் டிலாந்த பெரேரா தெரிவித்துள்ளார் அத்துடன் அடுத்துவரும் நாட்களில் ரயில் சேவையை படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|