சுற்றுச்சூழலுக்கு 48 மணித்தியாலங்கள் – உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல்துறை அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை!
Saturday, June 5th, 2021சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே, இலங்கை இம்முறை உலக சுற்றுச்சூழல் தினத்தை எதிர்கொள்கிறது என சுட்டிக்காட்டியுள்ள சுற்றாடல்துறை அமைச்சு இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளையும், வீட்டுத் தோட்டங்களையும், நுளம்புகளற்ற இடமாக வைத்திருக்க இன்றும், நாளையும், நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களைக் கோரியுள்ளது.
நாடுமுழுவதும் சுற்றுச்சூழலுக்கு 48 மணித்தியாலம் என்ற தொனிப்பொருளில், இந்த வேலைத்திட்டம் நடைமுறையாகிறது.
கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் தற்போதைய காலநிலையுடன், எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் நிலைமை உள்ளது.
எனவே இதனை கருத்திற் கொண்டு பொதுமக்கள் தத்தமது சுற்றுச்சூழலை தூய்மையாக பேணுமாறு சுற்றாடல்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாதியர்கள் தொடர்பில் புதிய திட்டம் - கோட்டாபய ராஜபக்ஷ!
மக்கள் அச்சமடையத் தேவையில்லை - யாழ்ப்பாண மக்களுக்கு பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் –பிரதேச செயலகம் முன்றலில் போராட்...
|
|