ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் சிவஞானசோதி நியமிப்பு!
Monday, February 8th, 2021சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக வே.சிவஞானசோதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமை தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து அரசாங்க கொள்கைக்கு அமைவாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளராக கடமையாற்றிய வே. சிவஞானசோதி இந்த ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார். இந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளடங்கலாக 3 உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு பாகிஸ்தான் கூட்டு பதவி நிலை குழுத் தலைவர் வாழ்த்து!
கொரோனா தொடர்பில் எந்த அறிகுறிகளும் காட்டாத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய...
தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்கு பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்து வாகனங்களை ...
|
|