ஜனாதிபதி – வடக்கின் முதல்வர் சந்திப்ப ஒத்திவைப்பு!

Tuesday, April 19th, 2016

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவிற்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் பிற்போடப்பட்டுள்ளன.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாகவே இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் நிலவும் காணி பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: