ஒதுக்கப்பட்ட 6893 கோடி ரூபா நிதி செலவிடப்படவில்லை!
Friday, July 7th, 2017
முதல் மூன்று காலப்பகுதிக்காக 51 அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6893 கோடி ரூபா பணம் செலவிடப்படவில்லை என நாடாளுமன்றிற்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியே பயன்படுத்தப்படவில்லை. அத்துடன், பாதுகாப்பு அமைச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலும் 1010 கோடி ரூபா செலவிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சுகாதார அமைச்சு 663 கோடி ரூபாவினையும், கல்வி அமைச்சு 752 கோடி ரூபாவினையும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு 420 கோடி ரூபாவினையும், மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு 439 கோடி ரூபாவினையும் செலவிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
வாகன இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்துள்ளது ...
சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறினால் நாட்டில் அடுத்த 10 வாரங்களில் டெல்டா பரவல் தீவிரமடையும் - இ...
உணவில் விஷத்தன்மை – 100 க்கும் மேற்பட்ட ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
|
|
|


