அனைத்து பல்கலைகழகங்களும் மீள திறக்கப்படுகிறது – மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, April 6th, 2021

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சகல பல்கலைகழகங்களும் ஏப்ரல் 14ஆம் திகதிக்கு பின்னர் மீள திறக்கப்படும் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கான உரிய திகதி குறித்து தற்சமயம் விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு திறக்கப்படும் பல்கலைக்கழங்களுக்கான சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தடகது.

Related posts: