ஜனாதிபதி ரணில் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா!

Saturday, April 6th, 2024

பெரும்போக நெற்செய்கையில் பெறப்படும் முதல் பகுதியை, ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா இன்று (06) நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்ரீ மஹா போதிக்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் 57 ஆவது தடவையாக நடாத்தப்படும் இந்த புத்தரிசித் திருவிழாவில், இலங்கையில் உள்ள ஒவ்வொரு விவசாய சேவை நிலையங்களிலிருந்தும் சேகரிக்கப்படும் அரிசி ஸ்ரீ மஹா போதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தரிசித் திருவிழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் இன்று அனுராதபுரத்திற்கு வருகை தந்திருந்தனர்.

எதிர்வரும் ஆண்டின் பருவ காலத்தில் பயிர்கள் செழிக்க புத்தரின் ஆசியைப் பெறுவதே இந்த புத்தரிசித் திருவிழாவின் நோக்கம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: