ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருது!
Wednesday, December 14th, 2016சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்காக வழங்கியுள்ள பங்களிப்பை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு விருது வழங்குவதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைப்பொன்றினூடாக ஜனாதிபதிக்கு இந்த விருதை வழங்க இருப்பதாக அந்த வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் அசேல இத்தவல கூறினார்.
இதேவேளை பெளத்த தர்மத்தின் தத்துவங்கள் நடைமுறை வாழ்க்கையில் அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அதுவே சமூகத்தில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று ஜனாதிபதி கூறினார்.
நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
Related posts:
பாதுகாப்பு துறைக்கு நவீன தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி!
நெல் கொள்வனவிற்கு தயார் - நெல் சந்தைப்படுத்தும் சபை!
நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்!
|
|