அரச ஊழியர்களின் ஊதிய அதிகரிப்பு – உடன் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!
Friday, November 8th, 2024
கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை புதிய அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான உதய சேனவிரத்ன அறிக்கையை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அனுபவமுள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
Related posts:
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பு - உறவுகளை பல்வேறு...
அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு ஒன்றும் அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை – பிரதமர் தெரிவிப்பு!
ஆயுதக்குழுவின் முக்கிய உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் அதிரடி கைது!
|
|
|


