ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம் – அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை!

Wednesday, March 23rd, 2022

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று (22) பிற்பகல் அலரிமாளிகையில் 03 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் டொலர் நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார விவகாரங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப் பின்னர், இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எல்லாம் நாளை தீர்க்க முடியாது, ஆனால் வரிசையாக முடிவிற்குக் கொண்டுவரத் தேவையான பணிகள் விரைவில் செய்யப்படும்.

அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் பிரச்னைகளை விரைவில் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இறுதியில் முடிவு செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் கருத்து தெரிவிக்கையில், “எந்தவித பதற்றமும் இல்லை. கலந்துரையாடல் அமைதியாக இருந்தது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் திறமையான பங்களிப்பை எங்கள் குழுவினர் பாராட்டினர்.” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: