ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சர்வதேச தாதியர் தின வாழ்த்து!

Wednesday, May 12th, 2021

தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய்ப்பரவலினை கட்டுப்படுத்துவதில் தாதியர்களின் பங்கு இன்றியமையாதது. அவர்கள் சிரமம் பாராது ஆரோக்கியத்தையும், அனைத்து சலுகைகளையும் தியாகம் செய்து, இரவும் பகலும் எங்களுக்காக அர்ப்பணித்து சேவை புரிகின்றனர்.

சர்வதேச தாதியர் தினமாகிய இன்று உலகெங்கிலும் உள்ள அனைத்து தாதியர்களுக்கும் எனது நன்றியையும் மனமார்ந்த வாழத்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாபெரும் சேவையினால் கிடைக்கப்பெறும் ஆசிர்வாத்தினால் அவர்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts: