நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!
Thursday, November 30th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (30) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்காக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டில் உள்ள ஆறு பேரில் ஒருவருக்கு நோய்!
சிறுவர் மருத்துவமனை அமைக்க யாழ்ப்பாண நகரில் காணி தேவை – நன்கொடையாக கோருகிறார் போதனா வைத்தியசாலை பணிப...
வெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் எமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும் - அதிகாரிகளுக்க...
|
|
|


