இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

Thursday, June 13th, 2019

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையானது யாழ். மாவட்டத்தில் தற்கால வேலைவாய்ப்பினை மையமாகக் கொண்டு முழு நேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளை நடத்தி வருகின்றது.

இதில் யாழ்ப்பாணம், காரைநகர், கைதடி, பண்டத்தரிப்பு, சுன்னாகம், மற்றும் வல்வெட்டித்துறை, தொழிற்பயிற்சி நிலையங்களில் கற்கை நெறிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

மூன்று மற்றும் ஆறு மாதங்கள் பயிற்சிக்காலத்தை கொண்ட இக் கற்கை நெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை மட்டம் 3/4 (NVQ – 3/4)  சான்றிதழுக்கான பயிற்சியாகும்.

இக் கற்கை நெறிகளை முழுமையாக பூர்த்தி செய்து NVQ சான்றிதளைப் பெற்றுக் கொள்ளும் அனைவருக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இக்கற்கை நெறிகளைக் கற்க விரும்புபவர்களை அலுவலகம், 4 ஆம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல.12 கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம், (0212227949 / 0777161955 / 0710318737 / 0710796440 / 0710378865 அல்லது காரைநகர் (0710318864 / 0710318862), கைதடி (0212232592 / 0710318863), சுன்னாகம் (0212241851 / 0766867018), பண்டத்தரிப்பு (0776184752), வல்வெட்டித்ததுறை (0212262550 / 0710318864) ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் எதிர்வரும் 22.06.2019 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ். உதவிப்பணிப்பாளர் கு.நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

Related posts: