ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம்!
Thursday, November 28th, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு இன்று (28) பயணிக்கவுள்ளார்.
இந்திய பிரமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தில் அவர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.
அத்துடன் இந்திய பிரதமருடன், ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்தைகளிலும் ஈடுடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய அரசின் அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
Related posts:
வாக்காளர் தினம் இன்று!
விஷேட வைத்திய நிபுணர்களது ஓய்வு பெரும் வயதெல்லை நீடிப்பு!
புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றது இறுதி அற...
|
|
|
பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவி...
ஜி.எஸ்.பி ப்ளஸ் சலுகையை வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நீதியமைச்சர் கலந்துரையாட...
ஒரு சில உயர் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு மாவட்டம் கல்வி நிலையில் உயர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்க மு...


