ஜனாதிபதி ஆலோசனை – மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 31 ஆம் திகதிவரை நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Wednesday, October 20th, 2021தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை, தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் தகவலொன்றும் வெளியாகியுள்ளது.
அதன்படி அனுமதி கிடைத்தால் நாளைமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை முன்னெடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை போக்குவரத்து சபையின் உதவி பொதுமுகாமையாளர் பண்டுவ சுவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
இலங்கையில் பாடசாலைகளை திறப்பதன் முதற்கட்டமாக நாளையதினம் 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மாணவர்களை பாடசாலைகளுக்கு கொண்டு செல்லும் சிசுசரிய பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|