ஜனவரிமுதல் தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும்!
Sunday, December 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பேருந்து சேவையை புதிய ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றால், இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பேருந்து சேவையை சுகாதார பரிந்துரைகளின் கீழ் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கலைமகள் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கணனி அன்பளிப்பு!
தபால் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு!
கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் - பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல...
|
|
|


