கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் – பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்!
Monday, May 20th, 2024
பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வார காலப் பகுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதி குறித்த மாணவர் கையேடு இன்னமும் வெளியிடப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இவ்வாறு மாணவர் கையேடு வெளியிடுவது கால தாமதமாகியுள்ளதோடு,
கையேட்டை வெளியிடாது மாணவர்களை அனுமதிப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என கூறப்படுகின்றது.
மேலும், கையேட்டை அச்சிட்டு வெளியிடுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவை என குறிப்பிடப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை- பொலிஸ் மா அதிபர்!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவித்தல்!
இலங்கை வங்குரோத்து நிலையில் இல்லை - 5.5% பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அடைகிறது - மத்திய வங்கி ஆளுநர...
|
|
|


