சேந்தாங்குளம் கடற்கரையில் 60 கிலோ கஞ்சா மீட்பு!
Friday, November 4th, 2022யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்து 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற் கரை பகுதியில் இன்று (4) காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் படகொன்று வருவதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இராணுவத்தினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
கைப்பற்றப்பட்ட 60 கிலோகிராம் கஞ்சா இளவாலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிழக்கில் தனித்துவ முஸ்லிம் அணி களமிறங்கத் தயார்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது எமக்கு பூரண நம்பிக்கை - கூட்டமைப்பு எம்.பி சித்தார்த்தன் கருத்து!
மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்றுப் பிரிவு அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது கைவ...
|
|