செவ்வாயன்று அமைச்சரவை கூடும்!
Monday, October 1st, 2018
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி’, ஜனாதிபதியின் ஐ.நா. உரை, மாகாண சபைத் தேர்தல் இழுத்தடிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவை தொடர்பிலும், முக்கிய சில அமைச்சரவைப் பத்திரங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
Related posts:
தொழில் திணைக்கள அதிகாரிகள் நாளை கட்டாயம் கடமைக்கு வர வேண்டும்!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
டிசம்பர் 2 ஆம் திகதி சாதாரண தர பரீட்சை ஆரம்பம்!
|
|