சுரக்க்ஷா காப்புறுதி ஒப்பந்தம் கைச்சாத்து!
Sunday, April 7th, 2019
இந்த வருடத்தில் சுரக்க்ஷா காப்புறுதியினை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கல்வியமைச்சில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. கல்வியமைச்சின் சார்பில் அதன் செயலாளர் நிஹால் ரணசிங்க அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன் அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரேகா அலஸ் கைச்சாத்திட்டார்.
கடந்த வருடம் முதலாம் திகதி தொடக்கம் இந்த வருடம் நவம்பர் 30ஆம் திகதி வரையில் சுரக்க்ஷா காப்புறுதிக் கொடுப்பனவுகளை வழங்க அலியான்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இணக்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை விமான சேவைக்கு ஆசியாவின் அங்கீகாரம்!
விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!
நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு ...
|
|
|


