சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கரிம உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அவர் நேற்று திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சாந்த பண்டாரவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கருணா, கே.பிக்கு சுதந்திரம்: அரசியல் கைதிகளுக்கும் அது வேண்டும் - அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்!
சீனா இலங்கை இடையே ஸ்மார்ட் அட்டை பயணச்சீட்டுக்களுக்கான இயந்திரங்களை பொருத்தும் உடன்படிக்கை !
முதலாவது கொரோனா அலையின் போது 7 வீதமானோர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர் - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்...
|
|