முதலாவது கொரோனா அலையின் போது 7 வீதமானோர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர் – மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல்!
Saturday, February 5th, 2022முதலாவது கொரோனா அலையின்போது நாட்டிலுள்ள ஊழியர்களில் 7% ஆனவர்கள் வேலையை இழந்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்துகிறது.
கொரோனா முதல் அலையின் தாக்கமானது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அறிக்கையின் மூலம் அவதானிக்கப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே விவசாயத் துறையில் 64.3% சுயதொழில் செய்வோர் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 14.6% வழமையான விளைபொருட்களை விற்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் சாராத சுயதொழில் செய்பவர்களில் 92.9 வீதமானோரின் வருமானம் குறைந்துவிட்டதாக அல்லது முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குமுதினி படகின் சேவை நேரம் மாற்றம்!
அரச வேலைவாய்ப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை - வேலையற்ற பட்ட...
இலங்கை வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர் - கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
|
|