சுங்க தொழிற்சங்க பேச்சுவார்த்தை தோல்வி – போராட்டம் தொடர்ந்தும்!

Saturday, February 2nd, 2019

சுங்க தொழிற்சங்கங்களுக்கும், நிதியமைச்சருக்கும் இடையில்இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விப்புல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்க பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய பீ.எஸ்.எம் சார்ள்சை அந்த பதவியிலிருந்து நீக்கி அதற்கு பதிலாக கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை நியமித்தமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்து அமைச்சு அறிவ...
பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆசிரியர்களின் ஆதரவு அவசியம் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே வலியுறுத்து...
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு அரசு தயார் - ஆனால், தேர்தல் எப்போது இடம்பெறும் என்று இப்போது சொ...