சுகாதார விதிமுறைகளை மீறிய ஆயிரத்து 240 முச்சக்கர வண்டிகள் கண்டறியப்பட்டது!
Thursday, April 29th, 2021முச்சக்கர வண்டிகள் தொடர்பாக நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது,தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,240 முச்சக்கரவண்டிகள் கண்டறியப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த தேடுதலில் நடவடிக்கையின்போது 6 ஆயிரம் 110 முச்சக்கர வண்டிகள் பரிசோதிக்கப்பட்டன. பல முச்சக்கரவண்டி சாரதிகள் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்
Related posts:
குளியலறையிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!
இன்று முதல் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம்!
முன்னாள் மாவட்டச் செயலர் கணேஷ் காலமானார்!
|
|