சுகாதார வழிமுறைகளை மீறிய 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
Wednesday, August 11th, 2021கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் சுகாதார வழிமுறைகளை மீறி ஆசன எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மாகாணங்களுக்குள் பயணிக்கும் 18 பேருந்துகளின் வீதி அனுமதிபப்த்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ஆசன எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளுடன் மாகாணங்களுக்கு இடையில் பயணித்த 50 பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி!
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா - வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு - வடக்கு மாகாண...
|
|