சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 5.30 க்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு!

Wednesday, September 6th, 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறித்த பிரேரணையை இன்று நாடாளுமன்றில் முன்வைத்திருந்தார்.

நாட்டில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, தரமற்ற மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி சுகாதார அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையை முன்வைத்துள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதம் இன்று மூன்று தினங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 5.30க்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஈ.பி.டி.பியின் எழுக தமிழ் கூட்டு எழுச்சி பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற...
பாடசாலை நேரத்திற்கு மேலதிகமான ஆசிரியர்களை வேலை வாங்கும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை என்கிறது இலங்...
சர்வதேச விமான நிறுவனங்கள் சில இலங்கையுடன் புதிய விமான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை - சுற்றுலாத்துற...

முன்னாள் பிரதமர் மஹிந்த மற்றும் பசில் நாட்டைவிட்டு வெளியேற மாட்டார்கள் - சட்டத்தரணிகள் உயர் நீதிமன்...
உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளது - வளிமண்டலவியல் திணை...
இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்ட...