சீரற்ற வானிலை – 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில்!
Tuesday, December 25th, 2018வடக்கில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 11,310 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கிளிநொச்சியில் 24 முகாம்களிலும், முல்லைத்தீவில் 13 முகாம்களிலும், மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒவ்வொரு முகாம்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பிரதேச செயலகங்களூடாக விநியோகிக்கப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் கடந்த நான்கு நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையால் 23,054 குடும்பங்களை சேர்ந்த 73,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
அரச நிறுவனங்கள் 88913 கோடி ரூபா கடன் !
நாம் அதிகாரத்தில் இருந்த போது வடக்கில் சமூகச் சீர்கேடுகள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது - ஈ.பிடி....
யாழ் மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்களுக்குப் பயிற்சி!
|
|