ஐந்நூறு ரூபாய் இலஞ்ச நோட்டு பொலிஸார் ஒருவருக்கு வைத்தது ஆப்பு!

Saturday, April 2nd, 2016

யாழ்.நீதிமன்றத்தில் வைத்து 500ரூபா லஞ்சம் வாங்கிய பொலிஸார் கடமையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது –

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் தொடர்பான பிரச்சினையில் சிக்கியிருந்தபோது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த வேலையை முடித்துத்தர 500 ரூபா தருமாறு நபரிடம் கேட்டுள்ளார்.

பொலிஸாருக்கு பணத்தினை கொடுத்த நபர் பணத்தில் உள்ள இலக்கத்தினை பதிவு செய்து விட்டு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

நீதிமன்றில் நின்ற அனைத்துப் பொலிஸாரையும் நீதிபதி அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, மன்னார் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் 500 ரூபா பணத்தினை வைத்திருந்துள்ளார்.

யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்தரன் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்

Related posts: