சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிப்ப – 9 வீடுகள் பகுதியளவில் சேதம்’ – மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று(16)  மதியம் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 247 குடும்பங்களை சேர்ந்த 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாள் பிரிவில், 839 குடும்பங்களை சேர்ந்த 2606 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்து வரும் நிலையில், தொடர்ந்தும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் மக்களுக்கான எதிர்வு கூறல் உள்ளமையால், மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய வெல்ல அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான முத்துஐயன்கட்டுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குறித்த குளத்தின்  நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையிலேயே குளத்தின் நான்கு நான் கதவுகள்  இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்  மக்களை மிகுந்த அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

24 அடி கொள்ளளவு கொண்ட முத்துஐயன்கட்டுக்குளத்தில் 23 அடி 3  அங்குல நீர்மட்டம் காணப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு  அங்குலத்துக்கும்  இரண்டு வான் கதவுகள் மூன்று அங்குலத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளன

இன்று காலை முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் திருமதி மஞ்சுளா ஜொய்ஸ்குமார் அழைப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம் உமா மகேஸ்வரன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி மாகாண நீர்ப்பாசன  பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன் ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர்இ.றமேஸ் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு நான்கு  கதவுகளை திறந்து வைத்தனர்

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் காணப்படுவதாகவும் அனைத்து குளங்களும் அதன் உச்ச கொள்ளளவை அடைந்துள்ளதாகவும் எனவே தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக  இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: