சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு – 253 குடும்பங்கள் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!
Tuesday, November 8th, 2022நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேநேரம், 9 மாவட்டங்களில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் ஒரு வீடு முழுமையாகவும் 161 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்ட முயற்சி – பருத்தித்துறையில் நேற்று பரபரப்பு!
சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில்!
சினோபோர்ம், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி!
|
|
சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு - நிதி சட்டமூலம் தொடர்பில்...
உலக தமிழர் பேரவை போன்று புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் - அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின...
வடக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க இலங்கைக்கு 1,600 மில்லியன் யென் உதவி வழங்க ஜப்பான் அரசாங்கம்...