சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
Thursday, November 9th, 2023சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மின் தடைகள் தொடர்பில் அழைப்பு நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதன் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
எனவே, டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி முறைப்பாடுகளை அனுப்புமாறு நுகர்வோரை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
இலங்கை மின்சார சபை தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு மின்தடைகளை விரைவில் மீளமைக்க 24 மணி நேரமும் செயற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்று உலக சுற்றாடல் தினம் !
வடக்கு மாகாணசபை தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது - அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!
பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை - சமுகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்...
|
|