சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடக்கில் விசேட விடுமுறை!
Friday, March 1st, 2019இந்துக்களின் விஷேட தினங்களில் ஒன்றான சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் செவ்வாய்க்கிழமை 05.03.2019 அன்று வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.
மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தினத்திற்கான பதிற்பாடசாலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் அவர் தெரிவித்துள்ளார் என அவரது ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
Related posts:
இரத்த மாதிரி அறிக்கையை விரைவாக பெற்று கொடுக்காத மருத்துவமனைகளுக்கு நடவடிக்கை!
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலும் பாரிய வெடிகுண்டு செயலிழப்பு!
எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 27 பேர் கடற்படையினரால் கைது!
|
|