சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம்!

சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் இன்றைய தினம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றங்கள் சேவைகளின் தேவை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரண்டு சிறைச்சாலை ஆணையாளர்கள் ஓய்வுபெற்றுச் சென்றமையினால் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இரண்டு சிரேஷ்ட மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும்கூடுதலாக சிரேஷ்ட மற்றும் உதவி சிறைச்சாலை மேற்பார்வையாளர்கள் உள்ளடங்க 14 அதிகாரிகளுக்கு இன்று முதல் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம், வெலிக்கடை, மெகசின், நீர்கொழும்பு மற்றும் தும்பறை சிறைச்சாலை அதிகாரிகள் குழுவிற்கு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலை பயன்படுத்த தடை!
விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப...
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான பிரேரணை அமைச்சர...
|
|